மத்திய அரசின் உதவியோடு, 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினிக்கு அடுத்த நிலையில் உள்ள ‘டேப்’வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அத்திக்கடவு - அவிநாசிதிட்டத்தின் மூலம் பல்வேறு இடங்களில் உள்ள ஏரி, குளங்களை நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர்க்கப்படாத குளங்கள் இணைக்கப்பட்டு, அவற்றுக்கும் நீர் வழங்கப்படும். கடந்த 2017-18 ம் ஆண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. அவர்கள் இப்போது கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய பின்னர், அடுத்தகட்டமாக விடுபட்ட மாணவர் களுக்கு வழங்கப்படவுள்ளது.
மத்திய அரசின் உதவியோடு, 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினிக்கு அடுத்த நிலையில் உள்ள ‘டேப்’ வழங்கப்படும். 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை ஆய்வு நடக்கவில்லை. முதல்வருடன் கலந்து பேசி இதுகுறித்து முடிவெடுக்கப்படும்.
தற்போது நடந்து வரும் வகுப்புகளுக்கு விருப்பப்பட்ட மாணவர்கள், பெற்றோர் அனுமதியோடு வரலாம் என நாங்கள் அறிவித்துள்ளோம். அதன்படி, தற்போது பள்ளிக்கு 98.5 சதவீதம் மாணவர்கள் வருகின்றனர்.
சிறப்பாசிரியர்களுக்கு மத்திய அரசு ரூ.5 ஆயிரத்து 500 மட்டுமே சம்பளமாக வழங்குகிறது. தமிழக அரசு இதனை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குகிறது. அவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் அரை நாள் பணிபுரிகின்றனர். இம்மாத இறுதிக்குள் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்து மத்திய அரசிடம் இருந்து கடிதம் கிடைத்த பிறகுதான், எப்போது, எப்படி நடத்துவது என்பது முடிவு செய்யப்படும். தலைமை தேர்தல் அதிகாரி தேர்தல் குறித்து ஆய்வு நடத்தி உள்ளார். அதில் எடுக்கப்படும் முடிவுக்கேற்ப 10 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.