புதுக்கோட்டை நகரப்பகுதியில் சமீபகாலமாக போதை ஊசி விற்பனை அதிகரித்துள்ளது. போதை தரக்கூடிய மாத்திரைகளை மருந்து கடைகளில் வாங்கி, அதனை பொடியாக்கி, தண்ணீரில் கலந்து ஊசி மூலம் உடலில் நரம்பில் செலுத்துவது உண்டு.
இந்த போதை ஊசிகளை குறிப்பிட்ட விலையில் விற்று வருகின்றனர். இந்த போதைக்கு சிலர் அடிமையாக உள்ளனர். இதனால் இதன் விற்பனை தற்போது அதிகரிக்க தொடங்கிய நிலையில் இதனை தடுக்க போலீசார் ஆங்காங்கே உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி புதுக்கோட்டை சந்தைபேட்டையில் போதை ஊசி மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்த திருவேங்கை வாசலை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 22), மேல 5-ம் வீதியை சேர்ந்த நவீன் (22) ஆகிய 2 பேரையும் டவுன் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் கைதான 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உமாமகேஸ்வரிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்படி 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி, நவீன் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து 2 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். போதை ஊசி மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்வது தெரிந்தால் உடனடியாக மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
போதை ஊசி மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.