அறந்தாங்கியில் இருந்து திருச்சிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அறந்தாங்கியில் இருந்து குளிர்சாதன வசதியுடன் கூடிய பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நேற்று காலை முதல் அந்த பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் தினமும் அறந்தாங்கியில் இருந்து காலை 6.05 மணி, மதியம் 12.05 மணி, மாலை 5.30 மணிக்கும் புறப்பட்டு திருச்சிக்கு செல்லும். இதேபோல் திருச்சியில் இருந்து 9.05 மணிக்கும், மதியம் 3.05 மணிக்கும், இரவு 8.12 மணிக்கும் புறப்பட்டு அறந்தாங்கிக்கு வருகிறது. இந்த பஸ் இயக்கப்பட்டதற்கு அறந்தாங்கி பகுதி மக்கள் பயணிகளுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பணிமனை மேலாளர் முத்துராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த பஸ்சில் புதுக்கோட்டைக்கு ரூ.40-ம், திருச்சிக்கு ரூ.100-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.