நாகை மாவட்டம் புஷ்பவனம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒரு பள்ளிவாசலுக்கு இந்து சமுதாயத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மார்பிள் கற்களை வழங்கியுள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்திலிருந்து 10 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது புஷ்பவனம் கிராமம். இங்கு சுமார் 2000-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. சமீபத்தில் புஷ்பவனம் கிராமத்தில் ஒரு புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டு அங்கு நேற்று நன்றி அறிவிப்பு மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த பள்ளிவாசலுக்கு மதுரையை சேர்ந்த கண்ணன் என்ற தொழிலதிபர் ஒருவர் மார்பிள்ஸ் சலவை கற்களை வழங்கியுள்ளார். அவரது மருமகன் சரவணன் என்பவர் குவிமாடம் கட்ட நிதியளித்துள்ளார். நேற்று மாலை தொழுகை நேரத்தில் அந்த பள்ளிவாசலுக்கு வந்த கண்ணன் அங்கு பிரார்த்தனை செய்தார். அப்போது அங்கு தொழுகைக்கு வந்த நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரி அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.
இது குறித்து கண்ணன் கூறும்போது ‘இறைப்பணியில் எங்கள் குடும்பத்தின் பங்களிப்பது இருப்பது மன நிறைவை தருகிறது’ என்றார்.
புஷ்பவனம் கிராமத்தில் கிட்டத்தட்ட 100 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு காலம் காலமாக இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதாக அந்த ஊர் மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.