குழந்தையின் உணவுக்குழாயில் திறந்த நிலையில் சிக்கிய 'பின்னூசி'யை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பாதுகாப்பாக வெளியே எடுத்து உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தெக்கலுார் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய ஒரு வயதுக் குழந்தை நித்தீஷ். மூச்சுவிட சிரமம் ஏற்பட்டு, அழுதுகொண்டே இருந்தது. குழந்தையை கோவை அரசு மருத்துவனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவில் அனுமதித்துள்ளனர். துறைத் தலைவர் அலி சுல்தான் தலைமையிலான மருத்துவர்கள், எக்ஸ்-ரே மற்றும் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்ததில் உணவுக்குழாயில், திறந்த நிலையில் பின்னுாசி ஒன்று குத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக, மயக்கவியல் துறை மருத்துவர் மணிமொழிசெல்வன் உதவியுடன், இரைப்பை, குடல், கல்லீரல் துறை உதவிப் பேராசியர் மருத்துவர் வி.அருள்செல்வன் தலைமையிலான குழுவினர், பின்னுாசியை அறுவை சிகிச்சையின்றி 'எண்டோஸ்கோபி' மூலம் பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். சிகிச்சை முடிந்து குழந்தை நலமுடன் வீடு திரும்பியுள்ளது.
வெளியே எடுக்கப்பட்ட பின்னூசி.
இது தொடர்பாக, மருத்துவர் அருள்செல்வன் கூறுகையில், ''எதை வேண்டுமானாலும் வாயில் வைத்துக்கொள்ளும் சுபாவம் குழந்தைகளுக்கு இயல்பாக இருக்கும். அவ்வாறு பொம்மைகளில் உள்ள பட்டன், பேட்டரி, பின்னூசி, குண்டூசி, சட்டை பட்டன்கள், ஊக்குகள், நாணயங்கள் போன்றவற்றை வாயில் வைக்கும்போது, 'வழுவழு'வென இருக்கும் என்பதால் எளிதாக உணவுக்குழாய், மூச்சுக்குழாய்க்குள் சென்றுவிடும்.
எனவே, குழந்தைகள் விளையாடும்போது பெற்றோர்கள் கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல, நிலக்கடலை, பட்டாணி, மக்காச்சோளம், சிறு கற்கள் போன்ற பொருட்களை வாயில் போட்டுக் கொள்ளாமல் தடுக்க வேண்டும். இயல்பான குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டாலோ, சாப்பிடுவதில் சிரமம் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்" என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.