அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இல்லை என மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக நினைப்பது வருத்தம் அளிக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்தியாவில் சமீபகாலமாக பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையடையச் செய்துள்ளது. சாமானிய மக்களின் மீது மத்திய அரசு பொருளாதார யுத்தத்தை மேற்கொண்டிருப்பதாக கருதுகிறோம்.
அதிமுக கூட்டணியில் இருந்து ஏற்கெனவே நாங்கள் வெளியேறிவிட்ட நிலையில், மீண்டும் அந்தக் கட்சிகளுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்பு கிடையாது. தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து பிப்.25-ம் தேதி சென்னையில் நடைபெறும் கட்சியின் நிர்வாகக்குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.