அறந்தாங்கி அடுத்த பேரானனூர் கிராமத்தை சேர்ந்தவர் சோலைகருப்பையா. இவரது மனைவி பிரியங்கா (வயது 23). இவர் நேற்று குளவாய்பட்டி அருகே உள்ள கத்தகுறிச்சியில் உள்ள அவரது சின்ன மாமியாரான செல்வி வீட்டிற்கு சென்று விட்டு, குளவாய்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து அறந்தாங்கி வழியாக மீமிசல் செல்லும் அரசு பஸ்சில் பிரியங்கா, செல்வி, நாத்தனார் ஆஷா ஆகிய மூன்று பேரும் அறந்தாங்கி வந்து உள்ளனர்.
அறந்தாங்கி பஸ் நிலையம் வந்ததும் பஸ்சை விட்டு கீழே இறங்கிய கையில் இருந்த கை பையை பிரியங்கா பார்த்த போது பை திறந்த நிலையில் இருந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
19 பவுன் நகைகள் திருட்டு
பின்னர் பையை பார்த்தபோது அதில் வைத்திருந்த நகை பெட்டி காணாமல் பேனது தெரியவந்தது. அதில் 3 பவுன் நெக்லஸ், மாங்கா காசு 7 பவுன், டாலர் செயின் 6 பவுன், செயின் 2 பவுன், மோதிரம் 1 பவுன் மொத்தம் 19 பவுன் தங்க நகைகளை பஸ்சில் பயணம் செய்த போது, மர்ம நபர் திருடி சென்று விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து பிரியங்கா அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.