கறம்பக்குடி அருகே குளத்தில் கார் கவிழ்ந்ததில் 3 பேர் காயம் அடைந்தனர். கார் கவிழ்ந்தது கறம்பக்குடி அருகே உள்ள நாங்கியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தாயுமானவன் (வயது 25). இவர் தனது காரில் நண்பர்கள் 2 பேருடன் திருவோணத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றனர்.
கறம்பக்குடி புதுக்குளம் அருகே சென்றபோது, கார் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஒடியது. அப்போது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 சரக்குவேன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றின் மீது மோதி புதுக்குளத்திற்குள் தலைகுப்புற கவிழ்ந்தது. மேலும் சரக்குவேன், மோட்டார் சைக்கிள்களும் குளத்திற்குள் கவிழ்ந்தன.
3 பேர் காயம்
இந்த விபத்தில் காரில் இருந்த தாயுமானவன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரும் காயம் அடைந்தனர். இதைகண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.