9, 10, 11-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் முதல் விடுமுறை வழங்கப்படும் என்ற தகவலில் உண்மையில்லை என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் திறக்கப்பட்டன.
கரோனா பரவல் அதிகரிப்பு
9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டும் தற்போது நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து 9 முதல் 11-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் முதல் விடுமுறை வழங்க கல்வித் துறை பரிசீலனை செய்து வருவதாக இணையதளங்களில் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘9, 10, 11-ம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்து கல்வித்துறை எந்த ஆலோசனையையும் நடத்தவில்லை.
நம்ப வேண்டாம்
இதுதொடர்பாக பரவும் தகவல்களை மாணவர்கள், பெற்றோர்நம்பவேண்டாம். தொடர்ந்து வகுப்புகள் நடைபெறும். தமிழகத்தில்சட்டப்பேரவை தேர்தல் ஏப்.6-ம்தேதி நடைபெறுகிறது. இதையடுத்து வாக்குச்சாவடிகளாக அமைந்துள்ள பள்ளிகளில் மட்டும்தேவைக்கேற்ப மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விடுமுறை தரப் படும்.
மேலும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்தான் தேர்தல் பணியில் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதனால் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கற்பித்தலில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. குறைந்த வருகைப்பதிவு கொண்ட பள்ளிகள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.