தமிழ் மொழியையும், தமிழர்களையும் அழிக்கும் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் ஹூமாயூனை ஆதரித்து அறந்தாங்கியில் நேற்று அவர் பேசியது:
தமிழ் மொழியையும், தமிழர்களையும் அழிக்கும் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும் தனியார்மயம், தாராளமயம், இனம், மொழி அழிப்பு போன்ற கொள்கைகளில் ஒன்றுபட்டு தான் இருக்கின்றன. பாஜகவை ஒழித்துவிட்டாலே மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி அமைந்துவிடும்.
அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்துவதற்காக, செயற்கை முறையில் தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது.
பசிக்கிறது எனக் கேட்டு வருவோருக்கு சோறு போடுவதைப் போன்று, தேர்தலில் எங்களுக்கும் ஒருமுறை வாய்ப்பு தாருங்கள். தமிழகத்தை சொர்க்க பூமியாக மாற்றுகிறோம்.
ஏற்கெனவே ஆட்சிக்கு வந்து ஒன்றும் செய்யாத கட்சியினருக்கு மீண்டும் ஏன் வாக்களிக்க வேண்டும்?. கடந்தகால காயங்கள், எதிர்கால சிந்தனைகள் இல்லாமல், நிகழ்கால தேவைகளை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கும் வகையில் ஆட்சியாளர்களால் தமிழக மக்கள் தள்ளப்பட்டு இருப்பதால், அவர்கள் இலவசங்களை எதிர்பார்க்கின்றனர் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.