கோபாலப்பட்டிணத்தில் பல இடங்களில் எரியாத தெருவிளக்கு சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் பல இடங்களில் உள்ள தெருவிளக்குகள் பல மாதங்களாகவும் ஒரு சில இடங்களில் 15 நாட்களுக்கு மேலாக எரியாமல் உள்ளது. இது சம்மந்தமாக ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரிடம் பல முறை புகார் தெரிவித்தும் இது நாள் வரை தெரு விளக்கு எரிய ஊராட்சி மன்ற நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர்.
குறிப்பாக இது சம்மந்தமாக அவுலியா நகர் 2-வது வார்டு உறுப்பினரிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து வார்டு உறுப்பினர் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து சென்றார்.மேலும் அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் பல முறை புகார் தெரிவித்தனர். ஆனால் இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். மேலும் ஒவ்வொரு முறையும் ஊராட்சி நிர்வாகத்திடம் எப்பொழுது சரி செய்யப்படும் என்று கேள்வி எழுப்பும் பொழுது நாளை சரி செய்யப்படும் என ஒவ்வொரு முறையும் நாளை, நாளை என சொல்லி காலம் தாழ்த்தி வருகின்றனர் என கொதிப்படைந்து உள்ளனர்.
எனவே ஊராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் அடிப்படை தேவைகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 15.03.2021 அன்று 7-வது வார்டு உறுப்பினர் சாதிக் பாட்ஷா அடிப்படை வசதியான குடிநீர் பைப் வசதி மற்றும் எரியாத தெருவிளக்கை சரி செய்ய வேண்டி ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.