தந்தையின் பாக்கெட்டில் இருந்த பணத்தை கேட்காமல் எடுத்ததால் திட்டிய தந்தை தந்தை, மனமுடைந்து பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்துள்ள கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். தச்சு தொழிலாளியான இவர் வீட்டில் இருந்தபோது தனது சட்டைப் பையிலிருந்த பணத்தை கேட்காமல் எடுத்ததால் பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகன் துரைமுருகனை (15) சுந்தரம் கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மகன் துரைமுருகன் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த சுந்தரம், வீட்டிற்கு வந்தபோது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த சூனாம்பேடு காவல் துறையினர் பிரேதத்தை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.