வங்கிகள் மார்ச் 27 - ஏப்ரல் 4 வரை ஏழு நாள்கள் இயங்காது



 

   
        மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதிக்கு இடையிலான 9 நாள்களில் 7 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் வரவுள்ளன.  பொதுத்துறை வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய போராட்டத்தின் காரணமாக, சமீபத்தில் தான் கடந்த வாரம் 4 நாட்கள் வங்கிகள் தொடர்ந்து வங்கி சேவைகள் தடைப்பட்டது. இந்த நிலையில் வரும் வாரத்திலும் தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை வரவுள்ளது. இந்தமுறை பொதுத்துறை மற்றும் தனியார் வங்குகளுக்கும் 7 நாள்கள் விடுமுறையை எதிர்கொள்ளவுள்ளன.


வங்கி விடுமுறை நாள்களும் காரணங்களும்:

மார்ச் 27 - மாதத்தின் நான்காவது சனிக்கிழமை விடுமுறை
மார்ச் 28 - ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 29 - ஹோலி பண்டிகை விடுமுறை
மார்ச் 30- ஹோலி பண்டிகையின் காரணமாக பாட்னாவில் மட்டும் விடுமுறை
மார்ச் 31 - நிதி ஆண்டு முடிவு விடுமுறை
ஏப்ரல் 1 - வங்கிக் கணக்கு முடிப்பு விடுமுறை
ஏப்ரல் 2 - புனித வெள்ளி விடுமுறை
ஏப்ரல் 4 - ஞாயிற்றுக் கிழமை
ஏப்ரல் 6 - தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் விடுமுறை

வங்கி சேவை தேவை உள்ளவர்கள் விடுமுறை நாள்களைக் கணக்கில் கொண்டு முன்னதாகவே பணிகளை முடித்து கொள்வது நல்லது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments