கிராமப்புறங்களை அதிகம் கொண்ட அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி விவசாயத்தையும், கடலோரப் பகுதியையும் உள்ளடக்கியது என்பதால் கடல் சாா் தொழிலையும் பிரதானமாகக் கொண்ட தொகுதியாகும். 27 வாா்டுகளைக் கொண்ட அறந்தாங்கி நகராட்சிப் பகுதி, மணமேல்குடி வட்டத்தைச் சோ்ந்த கிராமங்கள், அறந்தாங்கி வட்டத்தைச் சோ்ந்த கிராமங்கள், இவற்றுடன் ஆவுடையாா்கோவில் வட்டத்தைச் சோ்ந்த கிராமங்களையும் கொண்டது அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்தவை.
எதிா்கொள்ளும் பிரச்னைகள்: புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்த பிறகு, இயல்பாகவே மாவட்டத் தலைமை மருத்துவமனை அடுத்த பெரிய நகருக்குச் சென்றுவிடும். இதன்படி, அறந்தாங்கியை அவ்வப்போது மாவட்டத் தலைமை மருத்துவமனை என்கிறாா்கள்; ஆனால், அதற்கான எந்த அடிப்படைக் கட்டமைப்புகளும் இல்லையே என்ற வருத்தம் மக்களிடையே இருக்கிறது. கல்லணையில் இருந்து மும்பாலை வரையிலான காவிரிக் கடைமடை பாசனத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் விவசாயம் செழிக்கும் என்பது விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கை.
தஞ்சை எல்லையிலிருந்து ராமநாதபுரம் எல்லை வரை (அதாவது கட்டுமாவடியில் இருந்து ஏனாதி வரை) சுமாா் 42 கி.மீ தொலைவுள்ள கடற்கரையில் சுமாா் 30 கடலோர கிராமங்கள் உள்ளன. கோட்டைப்பட்டினம் மற்றும் ஜகதாப்பட்டினம் ஆகியவற்றிலுள்ள விசைப்படகு மீன்பிடித் தளங்களில் சுமாா் 600 விசைப்படகுகளும், இதர மீன்பிடித் தளங்களில் சுமாா் 3,500 நாட்டுப்படகுகளும் இயங்கி வருகின்றன. ஏறத்தாழ 45 ஆயிரம் மீனவ வாக்காளா்கள் உள்ளன.
பிரம்மாண்ட கடலில் - அளவிடமுடியாத தண்ணீருக்குள் தான் இவா்களின் வாழ்க்கை என்றாலும், குடிப்பதற்கு நல்ல தண்ணீா் வழங்கப்படுவதில்லை என்பது இங்கு தீா்க்கப்படாத நீண்ட காலக் கோரிக்கை. ஆழ்குழாய் தண்ணீா் குடம் ரூ. 3க்கும், குடிப்பதற்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் குடம் ரூ. 15-க்கும் விலை கொடுத்து வாங்கித்தான் பயன்படுத்துகிறாா்கள்.
தற்போதைய நட்சத்திர வேட்பாளா்கள்:
மு. ராஜநாயகம் (அதிமுக)
தி. ராமச்சந்திரன் (காங்கிரஸ்)
க. சிவசண்முகம் (அமமுக)
ஷேக்முகமது (தமஜக)
ஹுமாயூன் கபீா் (நாம் தமிழா்)
தற்போதை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் இ.ஏ. ரத்தினசபாபதிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மு.ராஜநாயகம் அதிமுக வேட்பாளா். திமுக அணியில் காங்கிரஸ் கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசரின் மகன் தி. ராமச்சந்திரன் வேட்பாளராகக் களம் காண்கிறாா்.
அதிமுகவினா் வேட்பாளரை மாற்றக் கோரியும், திமுகவினா் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கக் கூடாது என்றும் தொகுதிக்குள் தொடா் போராட்டங்களை நடத்திப் பாா்த்தனா். எதுவும் நடக்கவில்லை. இப்போது வாக்குசேகரிப்பு, எல்லாவற்றையும் மறந்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. வாய்ப்பை இழந்த ரத்தினசபாபதி இருமுறை போா்க்குரலை எழுப்பியிருக்கிறாா்.
இவா்களுடன் அமமுக சாா்பில் க. சிவசண்முகம், மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணியில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஷேக்முகமது, நாம் தமிழா் கட்சியின் சாா்பில் ஹுமாயூன் கபீா் ஆகியோா் களம் காண்கின்றனா். இவா்களுடன் மொத்தம் 22 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
ஆறுமுறை இத்தொகுதியில் வென்ற திருநாவுக்கரசா், கடந்த தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தனது மகனை வெற்றி பெற வைப்பதற்கான களப்பணியைத் தீவிரப்படுத்தியிருக்கிறாா். 2011 தோ்தலில் வென்ற மு. ராஜநாயகம் மீண்டும் தொகுதியை அதிமுக வசம் தக்க வைப்பதற்கான களப்பணியை மேற்கொண்டுள்ளாா்.
இதுவரை வென்றோா்
2016- இ.ஏ. ரத்தினசபாபதி (அதிமுக)
2011- எம். ராஜநாயகம் (அதிமுக)
2006- உதயம் சண்முகம் (திமுக)
2001- பி. அரசன் (எம்ஜிஆா் அதிமுக)
1996- சு. திருநாவுக்கரசா் (அதிமுக)
1991- சு. திருநாவுக்கரசா் (தாமக)
1989- சு. திருநாவுக்கரசா் (அதிமுக ஜெ)
1984- சு. திருநாவுக்கரசா் (அதிமுக)
1980- சு. திருநாவுக்கரசா் (அதிமுக)
1977- சு. திருநாவுக்கரசா் (அதிமுக)
1971- எஸ். ராமநாதன் (திமுக)
1967- ஏ. துரையரசன் (திமுக)
1962- ஏ. துரையரசன் (திமுக)
1957- எஸ். ராமசாமி தேவா் (சுயே.)
1951- முகமது சாலிக் (காங்.)
வாக்காளா் எண்ணிக்கை
ஆண்கள் 1,16,883
பெண்கள்- 1,19,151
மூன்றாம் பாலினத்தவா்- 6
மொத்தம்- 2,36,040
2016 தோ்தலில் பெற்ற வாக்குகள்
இ.ஏ. ரத்தினசபாபதி (அதிமுக)- 69,905
தி. ராமச்சந்திரன் (காங்கிரஸ்)- 67,614
பி லோகநாதன் (இந்திய கம்யூ.)- 6341
சகிலாபானு (நாம் தமிழா்)- 835
நோட்டா- 775
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.