தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் வீடு வீடாக வாக்காளர் சீட்டு வினியோகம் செய்யும்பணி தொடங்கி உள்ளது. இன்று 2-வது நாளாக வாக்காளர் சீட்டு வினியோகம் செய்யும் பணி நடந்தது.
வாக்காளர் சீட்டு- தமிழகம் முழுவதும் வினியோகம் தொடங்கியது
தேர்தல் நடக்கும் சமயங்களில் வாக்காளர்கள் மிக எளிதாக வாக்கு அளிப்பதற்காக வாக்காளர் சீட்டு வழங்குவது வழக்கத்தில் உள்ளது.
முன்பெல்லாம் அரசியல் கட்சிகள் தங்களது கட்சி வேட்பாளர் சின்னத்துடன் வாக்காளர் சீட்டு அச்சடித்து வீடுவீடாக வினியோகம் செய்வார்கள்.
அரசியல் கட்சிகள் வாக்காளர் சீட்டுகளை வினியோகிப்பதால், குழப்பம் மற்றும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து வாக்காளர்களுக்கு சீட்டு வினியோகம் செய்வதை தேர்தல் ஆணையமே மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 பேர் ஆண் வாக்காளர்கள். 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பேர் பெண் வாக்காளர்கள்.
வாக்காளர்கள்
தமிழகம் முழுவதும் இவர்கள் வாக்களிப்பதற்காக 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளை முழுமையான அளவில் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்களை எளிதில் வரவைப்பதற்கான பணிகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் வீடு வீடாக வாக்காளர் சீட்டு வினியோகம் செய்யும்பணி தொடங்கி உள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை)2-வது நாளாக வாக்காளர் சீட்டு வினியோகம் செய்யும் பணி நடந்தது.
அந்தந்த ஓட்டுச்சாவடிக்கு உரிய அதிகாரிகள் வாக்காளர் சீட்டு வினியோகம் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர். இந்த வார இறுதிக்குள் பெரும்பாலான வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டை ஒப்படைத்துவிட திட்டமிடப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.