நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினரின் முக்கிய வேண்டுகோள்!



நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த 7-வது வார்டு உறுப்பினர் சாதிக் பாட்ஷா அவர்கள் தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவருவதையடுத்து நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் உள்ள கிராமங்களில் யாரேனும் வெளியூர்களிலிருந்து வந்து வியாபாரம் செய்யும் பொழுது முகக் கவசம் அணியாவிட்டால் கட்டாயம் முககவசம் அணிந்து வியாபாரம் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.நமது கிராமங்களில் யாருக்கேனும் கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் வெளியில் செல்லும் போது தவறாமல் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தகவல்:அ.சாதிக் பாட்ஷா, 7-வது வார்டு உறுப்பினர், செல்:8838470709, கோபாலப்பட்டிணம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி, ஆவுடையார்கோவில் ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டம். 


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments