புதுக்கோட்டை நகராட்சி காந்திநகர், உசிலங்குளம், அய்யனார்புரம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீரில் சாக்கடை கலந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் குடிநீர் சீராக வினியோகிக்கப்படவில்லை எனவும், 15 நாட்களுக்கு ஒரு முறை வினியோகிப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் குடிநீர் வசதி கோரி நேற்று அப்பகுதி பொதுமக்கள் ஆலங்குடி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சிலர் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்திருந்தனர். சாக்கடை கலந்த கழிவு நீரை சிலர் குடங்களில் பிடித்திருந்தனர்.
இந்த மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் கணேஷ் நகர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் நேற்று காலை சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
இதற்கிடையில் நகராட்சியில் சீரான குடிநீர் வினியோகம் இல்லை எனவும், பாதாள சாக்கடை பணி நிறைவு பெறவில்லை எனவும் ஒருவர் பதாகையை தனது ஸ்கூட்டரில் முன்னும், பின்னும் தொங்கவிட்டுள்ளார். அவர் அந்த பதாகையுடன் ஸ்கூட்டரில் நகரப்பகுதியில் வலம் வந்தப்படி உள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.