புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார் வரப்பெற்றுள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதிச்சீட்டுப் பெற்று இயக்கப்படும் பேருந்துகளில், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 1989 விதி எண் 176 (2)-ல் கண்டுள்ள விவரங்கள் அனைத்தையும் கொண்டுள்ள பயணச் சீட்டுக்களை மட்டுமே பயணிகளுக்கு வழங்க வேண்டும். பயணச்சீட்டு கருவி மூலம் வழங்கப்பட்டாலும் அல்லது கையால் எழுதி வழங்கப்பட்டாலும் பயணச்சீட்டில் முழு விவரங்களும் பதியப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், அரசானையின்படி அனுமதிக்கப்பட்டுள்ள கட்டணத்தை மட்டுமே பயணிகளிடம் கட்டணமாக வசூலிக்க வேண்டும். மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் பொதுமக்கள் புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் 9384808384 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.