அரிமளம் ஒன்றியம் ஏம்பல் அருகே வயலாங்குடி பிரிவு சாலையில் அறந்தாங்கி தொகுதி தேர்தல் பறக்கும்படை தலைமை அதிகாரி முத்துக்குமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஏம்பல் பகுதியிலிருந்து வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது, காரில் வந்த அறந்தாங்கி பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் ரூ.75 ஆயிரத்து 380 வைத்திருந்தார். விசாரணையில் அவர் மளிகை கடைகளுக்கு சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்ததாகவும், அதில் இருந்து கிடைத்த பணம் என தெரிவித்தார்.
ஆனால் அந்த பணத்திற்கான உரிய ஆவணம் இல்லை. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்துக்குமார் அந்த பணத்தை பறிமுதல் செய்து அறந்தாங்கி கோட்டாட்சியர் ஆனந்த் மேகனிடம் ஒப்படைத்தார்.
இதுதொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி கூறும்போது, உரிய ஆவணங்களை காண்பித்து வியாபாரி மீண்டும் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.