தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு, மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. ஆதரவு கடிதத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி திமுக தலைமையிடம் கொடுத்துள்ளார்.
தமிழக அரசியல் களம் நாள்தோறும் புதிய பரபரப்புகளை சந்தித்து வருகின்றது. சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருப்பதால், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரச்சாரம், கூட்டணிகட்சிக்கு அதரவு என பரபரப்பாகக் காணப்படுகின்றது.
அந்த வகையில், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், திமுகவுக்கு அதரவு தருவதாகத் தொரிவித்தார்.
இந்நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரியும் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் திமுகவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தங்கள் கட்சியின் ஆதரவு திமுகவுக்கு இருக்கும் என்று தரிவித்துள்ளார்.
மேலும், தங்கள் கட்சிக்கு சென்ற முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற நாகப்பட்டினம் தொகுதியை வாப்பிருந்தால் ஒதுக்கித் தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக விரும்புவதாகவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.