புதுக்கோட்டை மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 240 வழக்குகள் மீது சமரச தீர்வு! உரியவர்களுக்கு ரூ.3 கோடியே 22 லட்சம் இழப்பீடு!!



மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 240 வழக்குகள் மீது சமரச தீர்வு காணப்பட்டன. உரியவர்களுக்கு ரூ.3 கோடியே 22 லட்சம் இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல்காதர் தலைமை தாங்கினார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான உமாராணி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சாந்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜா, முதன்மை சார்பு நீதிபதி மகாலட்சுமி, கூடுதல் சார்பு நீதிபதி அசோக்குமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 அறிவு, முனிக்குமார், கூடுதல் மகிளா கோர்ட்டு நீதிபதி ஜியாவுர்ரகுமான், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சஹானா ஆகியோர் கொண்ட அமர்வுகள் மற்றும் தாலுகா நீதிமன்ற அமர்வுகள் என மொத்தம் 8 அமர்வுகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில் கோர்ட்டில் நிலுவையில் உள்ள உரிமையியல், வாகன விபத்து இழப்பீடு, காசோலை மோசடி உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டன.

இதில் மொத்தம் 240 வழக்குகள் தீர்வு காணப்பட்டு உரியவர்களுக்கு ரூ.3 கோடியே 22 லட்சத்து 14 ஆயிரத்து 89 மதிப்பில் இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments