மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 240 வழக்குகள் மீது சமரச தீர்வு காணப்பட்டன. உரியவர்களுக்கு ரூ.3 கோடியே 22 லட்சம் இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல்காதர் தலைமை தாங்கினார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான உமாராணி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சாந்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜா, முதன்மை சார்பு நீதிபதி மகாலட்சுமி, கூடுதல் சார்பு நீதிபதி அசோக்குமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 அறிவு, முனிக்குமார், கூடுதல் மகிளா கோர்ட்டு நீதிபதி ஜியாவுர்ரகுமான், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சஹானா ஆகியோர் கொண்ட அமர்வுகள் மற்றும் தாலுகா நீதிமன்ற அமர்வுகள் என மொத்தம் 8 அமர்வுகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில் கோர்ட்டில் நிலுவையில் உள்ள உரிமையியல், வாகன விபத்து இழப்பீடு, காசோலை மோசடி உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டன.
இதில் மொத்தம் 240 வழக்குகள் தீர்வு காணப்பட்டு உரியவர்களுக்கு ரூ.3 கோடியே 22 லட்சத்து 14 ஆயிரத்து 89 மதிப்பில் இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.