அன்னவாசல் அருகே 6 மயில்களை கொன்று கடத்திய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர்கள் பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை ஊராட்சி அண்ணாபண்ணை வளைவு அருகே அன்னவாசல் போலீசார் நேற்று முன்தினம் இரவு ேராந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்த சைகை காட்டினர். ஆனால், அதில் வந்த 2 பேர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாக சென்றனர்.
அந்த மோட்டார் சைக்கிளில் 2 சாக்கு மூட்டைகள் இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை விரட்டிச் சென்றனர். போலீசார் பின்தொடர்ந்து வருவதை கண்டதும் சாக்கு மூட்டைகள், ஒரு நாட்டுத்துப்பாக்கி ஆகியவற்றை அங்கேயே போட்டு விட்டு 2 பேரும் தப்பி சென்று விட்டனர். பின்னர், அந்த மூட்டைகளை போலீசார் பிரித்து பார்த்தபோது அதில் இறந்த நிலையில் 6 மயில்கள் இருந்தன.
இதனையடுத்து இறந்த மயில்கள் மற்றும் நாட்டுத்துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில் போலீஸ் நிலையம் வந்த மாவட்ட வனத்துறை அலுவலர் சமீர் அஹமதுவிடம் இறந்த 6 மயில்களும் ஒப்படைக்கப்பட்டன. மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றவர்கள் மயில்களை நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்று ஏதோ காரணத்துக்காக கடத்தி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தப்பி சென்றவர்களை போலீசார் மற்றும் வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.