புதுக்கோட்டையில் கொரோனா தொற்றால் 2 இடங்களில் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் தற்போது 114 பேர் வரை கொரோனா தொற்றுக்குள்ளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மறைமலர் நகர் பகுதியில் ஒரே குடும்பத்தில் 4 பேருக்கும், அதே பகுதியில் மற்றொரு பெண்ணிற்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அந்த பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பபட்டன.
மேலும் தகரத்தால் தடுப்புகள் அமைக்கப்பட்டன. அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டதுடன், பிளிச்சீங் பவுடர் தெளிக்கப்பட்டன.
இதேபோல நியூ கோல்டன் நகர் பகுதியில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அப்பகுதி கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் மொத்தம் 2 இடங்களில் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.
நகராட்சி நிர்வாகம் மூலம் பொதுமக்களுக்கு வீடு, வீடாக கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.