அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, இராமநாதபுரத்தில் இருந்து மீமிசலுக்கு இரவு நேர கடைசி பஸ்கள் புறப்படும் நேரம்!



இரவு நேர ஊரடங்கில் அறந்தாங்கி, பட்டுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கடைசியாக இயக்கப்படும் அரசு பஸ்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஏப்ரல் 21 (செவ்வாய்க்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி இரவு நேர ஊரடங்கில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து மீமிசலுக்கு இரவில் கடைசியாக இயக்கப்படும் பேருந்து நேரம்: 8.30 மணி
பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து மீமிசலுக்கு இரவில் கடைசியாக இயக்கப்படும் பேருந்து நேரம்: 7.00 மணி
இராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மீமிசலுக்கு கடைசியாக இயக்கப்படும் பேருந்து நேரம்: 5.00 மணி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments