பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜா சிதம்பரம் (வயது 54). இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே விராலூர் பகுதியில் 12 வீட்டு மனைகள் வாங்கினார்.
இந்த வீட்டு மனைகளுக்கு தன் பெயருக்கு உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்ய விராலிமலை தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக (சர்வேயர்) பணிபுரியும் புதுக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்த தங்கதுரை (36) என்பவரை அணுகினார்.
அதற்கு தங்கதுரை, உட்பிரிவு பட்டா மாற்றம் செய்து தருவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக ஏற்பாடு செய்து தருவதாகவும், அந்த பணத்தை தங்கவேல் என்பவரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜா சிதம்பரம், புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்தார். லஞ்சஒழிப்பு போலீசார் ஆலோசனையின்பேரில், நேற்று மதியம் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை விராலிமலை தாலுகா அலுவலகம் அருகே உள்ள ஒரு மளிகை கடை முன்பு வைத்து தங்கவேலுவிடம் ராஜாசிதம்பரம் கொடுத்தார்.
அந்த பணத்தை பெற்ற தங்கவேல், நில அளவையர் தங்கதுரையிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன் தலைமையிலான குழுவினர் தங்கதுரையை கையும்-களவுமாக பிடித்து கைது செய்தனர். தங்கவேலுவிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.