மீமிசல் கடைவீதியில் 77-வது குடியரசு தின விழா: மனித உரிமைக் கழகம் சார்பில் தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கல்!



நாட்டின் 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, மீமிசல் கடைவீதியில் மனித உரிமைக் கழகத்தின் சார்பில் தேசியக்கொடி ஏற்றி வைக்கும் நிகழ்வு உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றது.

அதிகாரிகள் முன்னிலை
இந்த விழாவிற்கு மீமிசல் காவல் ஆய்வாளர் மாலதி தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மீமிசல் காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணன் முன்னிலையில் பாதுகாப்பு மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு
இந்நிகழ்வில் மீமிசல் சத்திரப்பட்டினம் கிராம நல சங்கத் தலைவர் மற்றும் வர்த்தக சங்கத் தலைவர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். மேலும், மனித உரிமைக் கழகத்தின் மாநில, மாவட்ட மற்றும் வட்டார நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றனர். இவர்களுடன் அப்பகுதியைச் சேர்ந்த வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இனிப்பு வழங்கல்
தேசியக்கொடி ஏற்றப்பட்டதை அடுத்து, அங்கிருந்த அனைவருக்கும் மனித உரிமைக் கழகம் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டு குடியரசு தின வாழ்த்துகள் பரிமாறப்பட்டன. 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு கடைவீதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments