மணமேல்குடியை அடுத்த கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் பிடிக்கப்படும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மணமேல்குடி வருவாய் ஆய்வாளர் காமராஜ் தலைமையில் அழகன்வயல் கிராம நிர்வாக அலுவலர் விஜயன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத மீன் ஏலக்கடை ஊழியர்கள் 10 பேருக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.