இரவு 10 மணி வரை வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி - தமிழக அரசு






தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 ஆனால் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரவு 8 மணி வரை அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 10 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இரவு 10 மணி வரை பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதி

இந்த தளர்வு நாளை (ஏப்ரல் 11) முதல் அமலாகிறது என தமிழக அரசு அறிவிப்பு

இதேபோல் புதுச்சேரியிலும் இரவு 10 மணி வரை வழிபாட்டு தலங்களை திறக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அனுமதி வழங்கியுள்ளார். சமயப் பெரியோர்களுடனான ஆலோசனைக்கு பின் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் வழிபாட்டு தலங்களில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments