கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவிய நிலையில் அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியது. அதன் பிறகு ஊரடங்கு படிப்படியாக தளர்வு அளிக்கப்பட்ட போது அரசு அறிவித்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பள்ளிவாசல்களில் தொழுகை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றது.
இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஏப்ரல் 10 முதல் புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. அதில் இரவு 8.00 மணிக்கு மேல் பொதுவழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் இஸ்லாமியர்களின் ஐந்து பெரும் கடமைகளின் ஒன்றான புனித ரமலான் மாதம் சில தினங்களில் துவங்க இருக்கிறது. இந்த மாதத்தில் முஸ்லிம்கள் காலை முதல் மாலை வரை நோன்பிருந்து இரவு நேரங்களில் இறைவனை தொழுது பிரார்த்தனையில் ஈடுபடுவர். இல்லாதோர்க்கு உதவிடுவர்.
கடந்த ஆண்டு முழு ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தால் இரவு நேர பிரார்த்தனைகளில் முஸ்லிம்கள் முழுமையாக ஈடுபட முடியவில்லை. தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பிலும் இரவு நேர வழிபாடு தடுக்கப்பட்டிருக்கிறது. இது புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் இழப்பாக அமையும்.தமிழக அரசு முஸ்லிம்களை இரவு நேர தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு.
எனவே இதனை கருத்தில் கொண்டு இரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் இரவு நேர தொழுகைக்காக இரவு 11 மணி வரை அனுமதிக்க வேண்டும் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.