புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி அஞ்சலி (வயது 55). விவசாயிகளான இந்த தம்பதி கறவை மாடுகள் வளர்த்து வந்தனர். இந்த நிலையில் அஞ்சலி வீட்டு அருகே பசுமாடுகளை கட்டி இருந்தார். அப்போது,வீட்டின் அருகே சென்ற உயர்அழுத்த மின்கம்பி திடீரென்று அறுந்து மாடுகள் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் 2 மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தன.
தகவல் அறிந்த வல்லத்ராகோட்டை மின்சார வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து அறுந்து விழுந்த மின்கம்பியை சரி செய்தனர். சம்பவ இடத்துக்கு போலீசாரும் வந்து பார்வையிட்டனர். இந்த மின்கம்பி ஏற்கனவே தாழ்வாக சென்றுள்ளது. இதனை சீரமைக்க பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை சரி செய்து இருந்தால் தனது மாடுகள் பலியாகி இருக்காது என அஞ்சலி கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. அதேநேரத்தில் மின்கம்பி அறுந்த நேரத்தில் மனிதர்கள் சென்று இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.