தமிழிழகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகத்தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை அமலில் இருக்கும் அதே நேரத்தில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கடற்கரை நகரமான கோபாலப்பட்டிணத்தில் இன்று 25.04.2021 ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் காரணமாக கோபாலப்பட்டிணம் முக்கிய சாலைகளில் மற்றும் வீதியில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
கோபாலப்பட்டிணத்தில் .இன்று முழு நேர ஊரடங்கை தொடர்ந்து கடைகள் திறக்கப்படவில்லை, மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை, இதனால் , ECR சாலை, மற்றும் கடற்க்கரை வெறிச்சோடின. ஊரடங்கின் காரனமாக பள்ளிவாசலில் ஐவேளை தொழுகை , தராவிஹ் தொழுகை மற்றும் இன்றைய இப்தார் கிடையாது என்றும் அவர் அவர் வீடுகளில் தொழுகை ,இப்தார் நிறைவேற்றிக்கொள்ளம் , அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவை மதித்து பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே தங்கி இருந்தனர்.
புகைப்பட உதவி
சுல்தான் அப்துல் காதர்
முகமது முபராக்
முகமது மஹாதிர்
பர்சாத் கான்
உஸ்மான்
அபுதாஹிர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.