கீரனூரில் ஓட்டுபோட வந்த மூதாட்டி இறந்து விட்டதாக கூறி திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கீரனூர் ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் மூதாட்டி லட்சுமி (வயது 80). இவர் ஓட்டு போடுவதற்காக வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்குச்சாவடிக்கு வந்தார். அங்கு அடையாள அட்டையை சரிபார்த்த தேர்தல் அலுவலர்கள் நீங்கள் இறந்து விட்டதாகவும் ஓட்டு போட முடியாது எனவும் திருப்பி அனுப்பினர்.
வெளியே வந்த மூதாட்டி தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வீரையாவிடம் தெரிவித்தார். உடனடியாக அவர் குளத்தூர் தாசில்தார் ரெங்கநாயகியிடம் புகார் கூறினார். இதுகுறித்து விசாரித்தபோது, லட்சுமியின் கணவர் ஆறுமுகம் இறந்து 4 ஆண்டு ஆகியுள்ளநிலையில் வாக்காளர்கள் பட்டியல் சரி பார்க்கும் போது அதில் மூதாட்டி லட்சுமி இறந்துவிட்டதாகவும், அவரது கணவர் ஆறுமுகம் உயிரோடு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
க்ஷஇதனால் அந்த மூதாட்டி வாக்குச்சாவடி அருகில் ஒரு மரத்தடி நிழலில் காத்துக் கிடந்தார். அவருக்கு உணவு பொருட்களை அங்கு இருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் வாங்கி கொடுத்தனர். மாலை 5 மணி அளவில்வந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இதேபோல் ஏகப்பட்ட புகார்கள் உள்ளதாகவும் எனவே அந்த மூதாட்டி ஓட்டுப் போட அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.