கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்






புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவின்படி வாகன ஓட்டுனர்கள், பொதுமக்களிடம் கொரோனோ வைரஸ் இரண்டாவது அலை நோய் தொற்று காலத்தில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முக கவசம் அணிவதன் அவசியத்தையும்,  கிருமிநாசினி பயன்படுத்துவது குறித்தும், அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் இலவச முகக் கவசங்களை வழங்கி மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த காவல் துறைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கூட்டத்தில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுரை  வழங்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments