கோபாலப்பட்டிணம் ரேஷன் கடைகளில் கொரனோ நிவாரணம் 2 ஆயிரம் வழங்கல்





தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் கொரோனா சிறப்பு நிவாரண நிதியாக அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்றும், அதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் இந்த மாதத்திலேயே வழங்கப்படும் என்று உத்தரவிட்டு, அந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல்  அருகே உள்ள கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணத்தில்  இன்று மே 16 ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டு ரேஷன் கடைகளில் டோக்கன் அடிப்படையில் கொரனோ நிவாரண 2 ஆயிரம் ரூபாய் குடும்ப அட்டைதார்களுக்கு கொடுக்கப்ப்பட்டது.

முன்னதாக டோக்கன் வீடு வீடாக வழங்கப்ப்ட்டது. மேலும் எந்த தேதியில், எந்த நேரத்தில் ரேஷன் கடைகளில் நிவாரண நிதி பெற வேண்டும் என்பதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகிக்கப்பட்டது.

கடை திறக்கும் முன்பே காத்திருந்தனர்

இதைத்தொடர்ந்து  கோபாலப்பட்டிணத்தில் இரண்டு ரேஷன் கடைகளில் கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் பணி 8 மணிக்கு தொடங்கியது.
 
ஆனால் ரேஷன் கடை திறப்பதற்கு முன்னதாகவே ரேஷன் அட்டைதாரர்கள் முககவசம் அணிந்தும், கையில் டோக்கனுடன் வந்து காத்திருந்ததை காணமுடிந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரேஷன் அட்டைதாரர்களை சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நிற்க வைத்தனர். பின்னர் அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. அதனை அவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுச்சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments