புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனாவைத் தடுக்க ‘பாலம்’ வாட்ஸ்அப் குழு தொடக்கம்: ஒரே நாளில் ஏராளமான புகார்களுக்கு காவல் துறை தீர்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனாவைத் தடுப்பதற்காக காவல் துறை சார்பில் ‘பாலம்’ எனும் வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் ஒரே நாளில் ஏராளமான புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி எல்.பாலாஜி சரவணன் ஆலோசனையின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸார், செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்கள், வணிகர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட பாலம் எனும் வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டது. குழு தொடங்கப்பட்ட, சிறிது நேரத்திலேயே ‘ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையை மறித்து ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பால் ஆம்புலன்ஸ்கள் சுற்றிச்செல்ல வேண்டியுள்ளது’ என ஒருவர் புகார் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து, ஆம்புலன்ஸ் போன்ற முக்கிய வாகனங்கள் செல்வதற்கு வழிவிட்டு மாற்றி அமைக்குமாறு எஸ்.பி அறிவுறுத்தியதையடுத்து அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் மாற்றி அமைத்தனர்.
இதேபோன்று, அறந்தாங்கியில் தேவையின்றி சுற்றித்திரிந்தோரை போலீஸார் அப்புறப்படுத்தியது, புதுக்கோட்டை அசோக் நகர் ரேஷன் கடையில் சமூக இடைவெளியின்றி நின்ற மக்களை போலீஸார் ஒழுங்குபடுத்தியது போன்றவை குறித்தும், கூட்டமாக சேர்ந்து கிரிக்கெட் போன்ற விளையாட்டு போட்டிகளில் ஈடுபட்டது, சூதாட்டம் குறித்த புகார்கள் மீது உடனுக்குடன் போலீஸார் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அதே குழுவில் பகிர்ந்தனர்.
இது குறித்து எஸ்.பி எல்.பாலாஜி சரவணன் கூறியது:
புதுக்கோட்டை மாவட்டத்தை கரோனா இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்குதான் பாலம் எனும் வாட்ஸ்அப் குழு தோற்றுவிக்கப்பட்டதற்கான நோக்கம்.
இக்குழுவில் இணைக்கப்பட்டுள்ளோர் பொதுமக்களுக்கு பாலமாக செயல்பட வேண்டும். ஒவ்வொருவரும் தகுதியான ஆலோசனைகளை கூறலாம். உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். மற்றபடி புகழ்பாடலோ, வீண் விவாதங்களோ தேவையில்லை என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.