அடிக்கடி கடல் உள்வாங்கி வருவதால் கடற்கரை கிராமங்களில் பாசி வளர்ப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, கோட்டைப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் கடற்கரை கிராமங்கள் ஆகும். இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரமாக மீன்பிடி தொழில் உள்ளது. அதுமட்டுமின்றி மீனவர்கள் கடற்கரையில் பாசிவளர்ப்பு தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கடல் பகுதியில் குறிப்பிட்ட தொலைவிற்கு கயிறு கட்டி, அதற்கு உட்பட்ட பகுதியில் பாசி வளர்ப்பு தொழிலில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாசிகள் 90 நாட்கள் வளர்க்கப்பட்டு பிறகு அறுவடை செய்து இதனை கர்நாடகா, தூத்துக்குடி, மதுரை போன்ற நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தப்பாசி உணவு பொருட்கள், அழகு சாதன பொருட்கள் மற்றும் மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது.
அடிக்கடி உள்வாங்கும் கடல்
இந்நிலையில் கடந்த சில தினங்களாக கடல் அடிக்கடி உள்வாங்குவதும், அதன்பின் சில மணிநேரத்திற்கு பிறகோ அல்லது ஒருநாளுக்கு பிறகோ சகஜநிலைக்கு வருகிறது. இதனால் பாசி காய்ந்து, அதன்பின் கடல் சகஜநிலைக்கு வந்தபிறகு பாசி அழுகி விடுகிறது.
இதனால் பாசி வளர்ப்பில் ஈடுபடும் மீனவர்கள் கடும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். ஏற்கனவே மீன்பிடி தடைகாலத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்கள் பாசி வளர்ப்பு தொழிலும் பாதிக்கப்பட்டதால் என்னசெய்வது என்றே தெரியாமல் உள்ளனர். எனவே பாசி வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.