Breaking: கோபாலப்பட்டிணத்தில் பலத்த சூறைக்காற்று: பொதுமக்கள் அச்சம்!



கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலவும் யாஸ் புயல் புதன் நண்பகலில் ஒடிசாவின் பாலசோர் அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணத்தில் இன்று மே 23 செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணி முதல் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.

பலத்த காற்றால் பல்வேறு இடங்களில் மரங்கள் எல்லாம் ஆடின, சில இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. தென்னை மர மட்டைகள் பலத்த காற்றால் தரையில் விழுந்தன.

பலத்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். ஏற்கனவே கொரனோ ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளில் இருந்து வருகின்றனர்.

கோபாலப்பட்டிணத்தில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்கிய மே 4 முதல் கடுமையான வெயிலும் அவ்வோபோது ஆறுதலாக கோடை மழை பெய்து வருகிறது.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...


Post a Comment

0 Comments