கோட்டைப்பட்டினம் பகுதியில் கடல் திடீரென உள் வாங்கியதால் பரபரப்பு



அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலை தொடர்ந்து தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கடலோர பகுதிகளிலும் இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. 

இந்தநிலையில் கோட்டைப்பட்டினம் பகுதியில் நேற்று அதிகாலை கடல் திடீரென உள்வாங்கியது. இதனால், கடலின் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தரை தட்டின. கடல் உள் வாங்கியதால் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments