இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக மருத்துவர்களை விரைவாக நியமிக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா நோய் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க கோரி ஏற்கனவே தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்திருந்தேன்.
தொடர்ந்து தொகுதிக்குட்பட்ட பல்வேறு மருத்துவமனைகளில் ஆய்வும் மேற்கொண்டேன்.
இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் சிகிச்சை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினேன்.
கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க வேண்டி பொதுமக்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே தமிழக அரசு தற்போதுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு விரைவாக கூடுதலான மருத்துவர்களை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு நியமிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல, இராமநாதபுரம் அரசு மாவட்ட பொது மருத்துவமனை, பரமக்குடி, திருச்சுழி உள்ளிட்ட தொகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை விடுத்துள்ளேன்.
கே நவாஸ்கனி,
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
மாநில துணைத் தலைவர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.