புதுக்கோட்டையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு திடீரென இருதய கோளாறு ஏற்பட்டதால் எம்.எல்.ஏ. பாதுகாப்பு கவச உடை அணிந்து சிகிச்சை அளித்தார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் 600-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான டாக்டர் முத்துராஜா நேற்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
அப்போது கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு திடீரென்று இருதயகோளாறு ஏற்பட்டது. தகவலறிந்த முத்துராஜா எம்.எல்.ஏ. உடனடியாக பாதுகாப்பு கவச உடை அணிந்து உள்ளே சென்று நோயாளிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் மருத்துவர்களிடம் மேல்சிகிச்சை முறை குறித்து அறிவுறுத்தினார்.
எம்.எல்.ஏ. முத்துராஜா டாக்டர் என்பதால் அவர் உடனடியாக சிகிச்சை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நோயாளிக்கு எம்.எல்.ஏ. சிகிச்சை அளித்தது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது. இதற்கிடையில் கொரோனா வார்டில் சிகிச்சை பணிக்காக 12 செவிலியர்களை நியமித்து தனது சொந்த செலவில் சம்பளம் வழங்க எம்.எல்.ஏ. முத்துராஜா நடவடிக்கை எடுத்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.