அறந்தாங்கி இஸ்லாமிய மன்றமும் நமது நகராட்சி நிர்வாகமும் இனைந்து 7/6/2021 நேற்று அறந்தாங்கியில் சத்திய மூர்த்தி நடுநிலைப்பள்ளியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது .
மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்களின் தலைமையில் இரண்டு ஆக்சிசன் செரிவூட்டி கருவிகள் அறந்தாங்கி சுகாதாரத்துறைக்கு டாக்டர்.முகமது இத்ரீஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் சுகாதாரத்துறை முன்களபணியாளர்கள் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் நகராட்சி நிர்வாக பணியாளர்கள் சுமார் 300 சிக்கன் பிரியாணி பொட்டலங்கள் தண்ணீர் பாட்டில் கொடுக்கப்பட்டது. மேலும் முககவசம் சானிடைசர் பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்டது.
இந்த விழாவில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் நகராட்சி ஆணையர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் சுகாதார துறை மருத்துவர்கள் செவிலியர்கள். வர்த்தக சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் திமுக நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் நகர காங்கிரஸ் பொறுப்பாளர்கள். மனிதநேய மக்கள் கட்சி பொறுப்பாளர்கள்.ஜமாத் பொறுப்பாளர்கள் நமது சங்க தலைவர் செயலர் பொருளாளர் ஒருங்கிணைப்பாளர்கள். சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் AIM மன்றத்தின் சார்பில் மிக்க நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். தடுப்பூசி முகாமில் கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது.
என்றும் மக்கள் பணியில்
அறந்தாங்கி இஸ்லாமிய மன்றம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.