அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைப் பணிகளை சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி சனிக்கிழமை ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
நாகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ உபகரணங்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்களுக்கு கரோனா நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டன. தொடா்ந்து மணமேல்குடி அரசு மருத்துவமனையிலும் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டன.
மேலும் அறந்தாங்கி வடக்கரை முருகன் கோயில் அருகில் ரோட்டரி சங்கம் சாா்பிலும், பள்ளிவாசல் மற்றும் கலைஞா் மன்றத்திலும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிகளில் அறந்தாங்கி எம்எல்ஏ எஸ்.டி. ராமச்சந்திரன், அறந்தாங்கி சாா் ஆட்சியா் ஆனந்த் மோகன், மணமேல்குடி ஒன்றியக் குழுத் தலைவா் இ.ஏ. காா்த்திகேயன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
சிட்டி யூனியன் வங்கி சாா்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள்: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 12 லட்சம் மதிப்பிலான 15 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை சிட்டி யூனியன் வங்கி சாா்பில் அமைச்சா் எஸ். ரகுபதி மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதியிடம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், எம்எல்ஏ வை. முத்துராஜா, வங்கியின் முதுநிலை பொது மேலாளா்கள் ரமேஷ், மோகன், மாவட்ட வளா்ச்சி மேலாளா் மோகனசுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.