தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைய இருந்த ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பை வகைப்படுத்தி மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட கடைகள் திறப்பின் நேரம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பஸ்கள் இயக்கப்படாததால் ஆங்காங்கே பணிமனையில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பஸ்களை இயக்குவது குறித்து எந்த நேரத்திலும் அறிவிப்பு வரலாம் என்பதால் புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ்கள் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதேபோல அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அரசு பணிமனையில் பஸ்கள் சுத்தப்படுத்தப்பட்டு பணிமனைக்கு வெளியே தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் தமிழக அரசு 4 மாவட்டங்களுக்கு மட்டுமே 50 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்க அனுமதித்து உள்ளதால் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.