திருவாரூர் மாவட்டம். முத்துப்பேட்டையை சேர்ந்த சிறுவர்கள் அஸ்பர் அல்கவ்ஷர்(வயது13), ஜாவித் ரஹ்மான்(12), ஷாஜித் அகமது(12) ஆகிய மூவரும் நண்பர்கள். அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9 மற்றும் 7ம் வகுப்புகள் படித்து வருகின்றனர்.
ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்து வரும் இவர்கள் புறாக்களை வளர்த்து வருகின்றனர். புறாக்களை பாதுகாக்க பெட்டி (கூண்டு) அடிப்பதற்கு பணம் சேர்த்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் உணவு இன்றி தவிப்பவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு கொடுப்பது போல் நாமும் கொடுக்க வேண்டும் என்று நினைத்த இந்த 3 சிறுவர்களும் புறாக்களுக்கு பெட்டி தயார் செய்ய சேமித்த பணத்தில் உணவு வாங்கி கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து முத்துப் பேட்டை கடைத்தெருவில் சுற்றித்திரிந்த ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதித்தவர்களுக்கு வழங்கினர்.
இதுகுறித்து சிறுவர்கள் கூறுகையில்,
இன்று 10 பேருக்கு உணவு வாங்கி கொடுத்தோம். இன்னும் பணம் இருந்திருந்தால் தண்ணீர் பாட்டிலும் வழங்கி இருப்போம். இதேபோல் பணம் சேர்த்து அதிகமான நபர்களுக்கு உணவு, தண்ணீர், மாஸ்க் வாங்கி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறோம் என்றனர்.
சிறுவர்களின் இந்த செயல் சமூக வலைத்தளத்தில் பரவி பாராட்டுகள் குவிந்து வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.