பிளஸ்2 மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு எப்படி ? தமிழக அரசு அறிவிப்பு




பிளஸ்2 மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு எப்படி ?  தமிழக அரசு அறிவிப்பு
    
சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் மதிப்பீடும் முறையை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 சதவீதம், பிளஸ் 1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ் 2 செய்முறை மற்றும் அகமதிப்பீட்டு தேர்வில் பெற்ற 30 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட உள்ளது.

இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

கோவிட் காரணமாக நடப்பு கல்வியாண்டில் நடக்க இருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மதிப்பெண் வழங்கும் முறை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை அளித்து உள்ளது.
10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளன. பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு அதற்கான மதிப்பெண்கள், வழங்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 தேர்வுக்கு இறுதி மதிப்பெண்கள் கீழ்கண்ட விகிதாச்சார அடிப்படையில் வழங்க வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.
இதன்படி;

* 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு (உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள் சராசரி ) - 50 சதவீதம்

* 11ம் வகுப்பு பொதுத்தேர்வு( ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை மதிப்பெண் மட்டும்) -20 சதவீதம்

* 12ம் வகுப்பு செய்முறை தேர்வு / அகமதிப்பீடு - 30 சதவீதம்

*பிளஸ் 2 வகுப்பில் ஒவ்வொர பாடத்திலும் செய்முறை தேர்வு (20) மற்றும் அக மதிப்பீட்டில்(10) என மொத்தம் 30க்கு பெற்ற மதிப்பெண் மட்டும் கணக்கில் எடுக்கப்படும்

*செய்முறை தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் (10)பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு முழுவதும் கணக்கிடப்படும்.

* கோவிட் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பிளஸ் 2 செய்முறை தேர்வுகளில் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு, அவர்களின் 11ம் வகுப்பு செய்முறை தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

* 11 மற்றும் 12ம் வகுப்பு செய்துமுறை தேர்வுகள் இரண்டிலும் பங்கு பெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 10ம் வகுப்பு 11ம் வகுப்பு எழுத்து தேர்வுகளின் அடிப்படையில், 12ம் வகுப்பு செய்முறை தேர்வு மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.

*கடந்த ஆண்டு 11ம் வகுப்பு எழுத்து தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ, தேர்வு எழுத இயலாத நிலை இருந்தாலோ, அம்மாணவர்களுக்கு அத்தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையை கருத்தில் கொண்டு 35 சதவீதம் மதிப்பெண்
வழங்கப்படும்.

*11ம் வகுப்பு எழுத்து தேர்வு, அக மதிப்பீடு செய்முறை தேர்வு மற்றும 12ம் வகுப்பு அக திப்பீட்டு செய்முறை தேர்வு ஆகிய தேர்வு நிலையகளில் ஒன்றில் கூட கலந்து கொள்ளாத மாணவர்கள், தனித்தேர்வர்களாக தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.
மாணவர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு

*ஒவ்வொரு மாணவர் மதிப்பெண்ணும் மேற்கூறிய முறையில் கணக்கிடப்பட்டு, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஜூலை 31ம் தேதிக்குள் அரசு தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியாகும்.

*இம்மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள், தமக்கு குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பினால்,12ம் வகுப்பு எழுத்து தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும். அவ்வாறு நடத்தப்படும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்ணே, அவர்களது இறுதி மதிப்பெண்ணாக அறிவிக்கப்படும்.

*தனித்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு கோவிட் பரவல் சீரடைந்தவுடன், மேற்குறிப்பிட்டோருடன் சேர்த்து தக்க சமயத்தில் தேர்வு நடத்தப்படும். இத்தேர்விற்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments