டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக வீரருக்கு மாநில அரசு சார்பில் 3 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 18 ஆயிரம் விளையாட்டு வீரர்களில் 10 ஆயிரம் பேர் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்நிலையில், மீதமுள்ள வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டது. விளையாட்டு மேம்பாட்டு துறை, சுகாதாரத்துறை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் ஆகியவை இணைந்து, சிறப்பு தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்தது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பின்னர், முதற்கட்டமாக விளையாட்டு வீரர்கள் 5 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேலும், ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு அரசின் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்கள் 6 பேருக்கு தலா 5 லட்ச ரூபாயை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.
சுப்பிரமணியன், சேகர்பாபு, மெய்யநாதன், எம்.எல்.ஏ.க்கள் உதயநிதி ஸ்டாலின், பரந்தாமன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்க பதக்கம் வெல்லும் தமிழக வீரருக்கு மாநில அரசு சார்பில் 3 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். வெள்ளி பதக்கம் வென்றால் 2 கோடி ரூபாயும், வெண்கலம் அறுவடை செய்தால் 1 கோடி ரூபாயும் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.