உடனடியாக மின் இணைப்பு வழங்கும் நிலையில் உள்ள விண்ணப்பங்களுக்கு 3 நாட்களில் மின்இணைப்பு வழங்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, மின்வாரியத்தின் பகிர்மானப் பிரிவு இயக்குநர், அனைத்து தலைமைப் பொறியாளருக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதிதாக தாழ்வழுத்த மற்றும் உயரழுத்த மின் இணைப்புகளுக்கு இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதிகட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மின்இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ்பெறப்பட்ட ஏராளமான உயரழுத்த,தாழ்வழுத்த மின் இணைப்பு விண்ணப்பங்கள் மீது பல்வேறு நிலைகளில் எவ்வித நடவடிக்கையும்எடுக்காமல் நிராகரிக்கப்பட்டுள் ளன.
எனவே, தாழ்வழுத்த பிரிவின் கீழ் பெறப்பட்ட உடனடி மின் இணைப்பு வழங்கக் கூடிய நிலையில் உள்ள விண்ணப்பங்கள் மீது 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அல்லது மின் இணைப்புவழங்க வேண்டும். பின்னர், இதுகுறித்த அறிக்கையை வணிகப் பிரிவு தலைமைப் பொறியாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து தலைமை மற்றும் கண்காணிப்புப் பொறியாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.