நிலுவை சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஜனநாயகத் தூய்மைப் பணியாளர் சங்கத்தினர் இன்று (ஜூன் 29) காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டையில் சுமார் 200 துப்புரவுப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்குக் கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. சம்பளத்தை உடனே வழங்க வேண்டும், பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்க வேண்டும், அவதூறாகப் பேசும் தூய்மைப் பணி ஆய்வாளர்கள் 3 பேரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஆட்சியரிடம் அண்மையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
எனினும், கோரிக்கைகள் நிறைவேறாததை அடுத்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஜனநாயகத் தூய்மைப் பணியாளர் சங்கத்தின் தலைவர் கசி விடுதலைக்குமரன் தலைமையில் இன்று காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதில், ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர், புதுக்கோட்டை கோட்டாட்சியர் அபிநயா, நகராட்சிப் பொறியாளர் ஜெ.சுப்பிரமணியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அனைத்துக் கோரிக்கைகளையும் படிப்படியாக நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்துப் போராட்டம் கைவிடப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.