ஊரடங்கு தளர்வுகள்: தமிழகத்தில் கூடுதலாக 23 மாவட்டங்களில் பேருந்துகள் மாவட்டத்திற்குள் இயங்க அனுமதி






தமிழகத்தில் கூடுதலாக 23 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் பல புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூலை 5-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாது அலை மிகத் தீவிரமாக பரவியதால், கடந்த ஒரு மாத காலத்துக்கும் கூடுதலாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக தமிழக அரசு மே மாதம் 24-ம் தேதி முதல் இரண்டு வார காலத்துக்கு தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியது. அதன்பிறகு, கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துவரும்நிலையில், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. அதன்படி, தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்கள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மட்டும் கடந்த வாரம் முதல் பொதுப் போக்குவரத்தான அரசுப் பேருந்து இயக்கப்பட்டுவருகிறது. இந்தநிலையில், புதிய ஊரடங்கு தளர்வுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி,

வகை இரண்டிலுள்ள 23 மாவட்டங்களான அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

மாவட்டங்களுக்கிடையே பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

வகை 1-ல் வகைப்படுத்தப்பட்டுள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments