புதுக்கோட்டை ஆட்சியராகப் பொறுப்பேற்றுக்கொண்ட கவிதா ராமு. புதுக்கோட்டையின் 41-வது ஆட்சியராக கவிதா ராமு இன்று பொறுப்பேற்றார்.
புதுக்கோட்டை ஆட்சியராகப் பணிபுரிந்த பி.உமா மகேஸ்வரி, டிஎன்பிஎஸ்சி செயலாளராக மாற்றப்பட்டதையடுத்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநராகப் பணிபுரிந்த கவிதா ராமு புதுக்கோட்டை ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் ஆட்சியராக இன்று (ஜூன் 17) பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"பெண்ணுரிமைப் போராளி, சமூக சீர்திருத்தவாதி முத்துலட்சுமி ரெட்டி பிறந்த ஊரில் ஆட்சியராகப் பணிபுரிவதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
தொல்லியல் துறையில் பணியாற்றியபோது மாநிலத்தில் 2-வது பெரிய அருங்காட்சியமாக விளங்கும் புதுக்கோட்டை அருங்காட்சியம் கூடுதல் நிதி ஒதுக்கி மேம்படுத்தப்பட்டது. மேலும், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த புதுக்கோட்டையைச் சுற்றுலா வளர்ச்சி குறித்து கவனம் செலுத்துவேன்.
தமிழக முதல்வர் தெரிவித்துள்ளதைப் போன்று அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், கோரிக்கைகள் குறித்து நடவடிக்கைகளும் எடுக்க உரிய கவனம் செலுத்தப்படும். பொதுமக்கள் எனது செல்போனுக்கு 94441 81000 தொடர்புகொள்ளலாம்" என்றார்.
.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.